இனிப்பு வழங்கி மகிழ்ந்த புதுக்கோட்டை விவசாயிகள்... என்ன காரணம் தெரியுமா

காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டம் இந்த ஆண்டிலேயே செயல்படுத்தப்படும் என தமிழக ஆளுநரின் சட்டப்பேரவை உரையில் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.


2020 ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று (திங்கள்கிழமை) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமது உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.


குறிப்பாக, "காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டம் 7,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என்றும், அதற்கான முதல்கட்ட பணிகள் இந்த ஆண்டே துவங்கும்" எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக ஆளுநருக்கும், இத்திட்டத்தை முன்னெடுத்த தமிழக முதல்வருக்கும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளும், கடைமடை விவசாயிகளும் தங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.


Popular posts
காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி இன்று கொரோனா உருவ படம் சாலை மையத்தில் வரைந்து நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தூய்மை காவலர்களுக்கு சீறுடைகள் வழங்கப்பட்டன
Image
உத்தரகாண்ட் மாநிலத்தில் விஜய் பகுகுணா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, 2012-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம்
தூத்துக்குடி VOC கல்லூரி ஆண்டு விழா -DSP பிரகாஷ் பரிசுகள் வழங்கினார்
Image
வேப்பூர் கால்நடை துணை மருத்துவமனை எம்எல்ஏ, கலைச்செல்வன் திறந்து வைத்தார்
Image
வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம், கிரிமி நாசினி உள்ளிட்ட பொருட்களை திமுக மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜா வழங்கினார்
Image